Monday, 2 July 2012
Wednesday, 15 February 2012
தமிழன் என்றால் அறிவன்
தமிழன் என்றால் அறிவன்
உலகில் அறிவுக்கு முக்கியத்துவமும் அறிவைப் போற்றி வணங்கிய இனமும் அறிவைக் கடவுளாக கொண்ட இனமும் தமிழினம்தான். அறிவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளையும் இறை நெஞ்சம் வழியாக உருவம் கண்டு அதற்கான குறியீடும் அக்குறியீட்டிற்கான பொருளையும் தந்து மனிதன் மனிதனாக வாழ இறைவழிபாட்டில் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
தமிழ் என்ற சொல்லுக்கு அறிவு என்று பொருள் படுகிறது. தமிழன் என்றால் அறிவன் என்று பொருள்படுகிறது. ஆகவே, தமிழர்கள் அனைவருமே அறிவார்ந்தவர்களாக விளங்குகிறார்கள்.
அறிவுக்கு உருவம் கொடுத்து அறிவையே கடவுளாக நினைக்கும் இனம் தமிழினம்தான். ஆகவே, இன்றளவில் தமிழர்கள் முருகனை தமிழ் கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர்.
அறிவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தமிழ் கடவுள் திருக்கரங்களில் ஏந்திருக்கும் வேல் எடுத்துக் காட்டாக விளங்குகிறது:-
அறிவை வேலின் கூர்மையாகவும் வேலின் அகன்ற வடிவம் விரிந்த பரந்த சிந்தனையுடனும் வேலின் நீளம் தூரநோக்கு கொள்கையுடனும் வேலை ஆழப் பதித்திருத்தல் ஆழ்ந்த எண்ணங்களுடன் முடிவெடுத்தலும் குறிக்கின்றது.
Subscribe to:
Posts (Atom)