Thursday, 14 April 2011

கொடிமரம்

கொடிமரம்

மனித உடலில் முதுகெலும்பின் செயல்பாட்டினை விளக்குவது திருக்கோயிலின் கொடிமரம்.

கொடிமரம் மனிதனுடைய முதுகு தண்டிற்கு ஒப்பானதாக விலங்குகிறது.கொடிமரத்தில் இருக்கும் ஒவ்வொரு அடுக்கும் அல்லது தட்டும் மனிதனின் முதுகிலுள்ள இணைப்பை குறிப்பிடுகின்றன.

கொடிமரத்திலுள்ள உச்சி பகுதியில் அமைந்திருக்கின்ற மூன்று நிலைகள் மனிதனின் மூவித மூளைகளைப் பற்றி விளக்குகின்றன. அவை பெருமூளை (Cerebrum).மத்திய மூளை (Midbrain), கீழ்மூளை (Cerebellum) ஆகியவை.

கொடிமரத்தின் முதல் நிலை பெருமூளையின் முன் பகுதி:-

பேச்சினை இயக்குவது,இதன் ஒத்துழைப்போடு எண்ணங்கள்,உணர்ச்சி மற்றும் செயல் திறனை கட்டுப் பாட்டில் வைதிருக்கும் இடமாக இப்பகுதி காணப்படுகின்றது.



மேற்பகுதி:- உடலியல் உணர்வாகிய அறிதல்,தொடுதல்,அழுத்தம்,தட்ப வெட்பம் மற்றும் வலியை அறிந்த பின் பொருள் மாற்றம் செய்யும் இடமாக அமைகின்றது.

பக்கப் பகுதி:-ஒலியை நினைவு கூர்தல்,இதன் நாதமும் ஓசையின் வேகமும் இப்பகுதியில் இடம் பெறுகின்றன.இப்பகுதியில் அமைந்திருக்கும்  பிளவு நினைவுகளை சேமிக்கும் கிடங்காக முக்கிய பங்காற்றுகின்றது.


பின் பகுதி:- இவ்விடம் கண்டுபிடித்தல் மற்றும் காணும் காட்சியை பொருள் மாற்றம் அல்லது விளக்கம் செய்வது.


கொடிமரத்தின் நடு நிலை மத்திய மூளையை குறிக்கின்றது:-







மத்திய மூளையின் ஆளுமை புறநடவடிக்கையுடனும் இதன் எல்லை வட்டார தொடர்புடைய உறுப்புக்களின் வெளியுறையுடனும் தகவல் தொடர்பு நிலையத்துடனும் (Thalamus) இணைகின்றது.




கொடிமரத்தின் கீழ் நிலை;-

கொடிமரத்தின் கீழ் நிலை இரண்டாவது பெருமூளை எனும் கீழ் மூளையை குறிக்கின்றது. இதன் நரம்புத் தொடர்புகள் மூளையின் மற்ற வட்டார இணைப்புடன் இணைகின்றது. முதுகு தண்டின் நரம்பு கற்றை எளிதாக வழவழப்புடனும் துல்லியதமாக இயங்குவதற்கு சமநிலை கட்டுப் பாட்டில் அமைந்திருக்கும்.

கொடிமரத்தின் கயிறு:-
திருவிழாக் காலங்களில் கொடிமரத்தின் கயிறு உச்சி ஏறி தொடுவதைப் போல அமைந்திருக்குமானது உடலிலுள்ள நரம்பு கற்றைகள் அனைத்தும் முதுகு தண்டு வழியாக செல்வது போல் உள் மற்றும் வெளி உணர்வுகளின் செயல்பாட்டின் தொடர்புகளை மூளைக்கு அனுப்பி வைக்கும் செயலை கொடிமரத்தில் காண்பிக்கப் படுகின்றன.

நரம்பு கற்றைகள் அனைத்தும் உடலில் பல பாகங்களுக்கு இணைக்கப் பட்டு  நரம்பு வழியாக தகவல் தொடர்பினை பெறப்பட்டு இதன் வாயிலாக உள் மற்றும் புற சூழ்நிலைக் கேற்றவாறு மூளைக்கு தகவல் அனுப்புவதும் பெறுவதுமாக அமைகின்றது.                                      
                                      












ஆலயமும் சுற்றுச் சூழலும்

                                                                  ஆலயமும் சுற்றுச் சூழலும்

 

சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்துவது ஆலயமே.

கோயில் இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம் என்பதன் பொருள் தூய்மை இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம் என்பதுதான் அதன் பொருள்.

ஆலயம் அமைக்கப் படுவதன் நோக்கம் சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்து வதற்க்காக திருக்கோயில் கோபுர கலசத்தின் வழியாக ஈர்க்கப் படும் அனைத்து கதிர்களையும் கருவறையின் திருவுருவத்தில் ஈர்க்கப் பட்டு ஸ்தாபனம் செய்யப் பட்டிருக்கும் எந்திரத்தில் நிலை நிறுத்தப் படும்.

பலிபீடம்

பலிபீடம் என்பது தீங்கானவற்றை அழிக்கும் அல்லது ஈர்க்கும் கருவியாகும். ஆகவே எந்திரத்தில் வெளிப்படும் கதிர்களில் தீங்கானவை அனைத்தும் நேரடியாக ஈர்க்கப்பட்டு அழிக்கப்படும். எனவேதான் பலிபீடத்தை குறுக்கலாக கடக்கக் கூடாது என்கிறார்கள் ஞானிகள். இதைப்போலவே அடியார்கள் அனைவரும் பலிபிடத்தின் முன் விழுந்து வணங்கும் பொழுது ஆன்மாவிற்கு தீங்கை விளைவிக்கும் மலங்களை பலிபீடம் ஈர்க்கும் அல்லது அழிக்கும் கருவியாக அமைந்திருக்கும்.






கருவறை எந்திரம்


அடியார்கள் வழிபடும் வேளையில் கருவறை எந்திரத்தில் வெளிப்படும் கதிர்கள் வெளியே கண்ணுக்கு புலப்படாது மையம் கொண்டிருக்கும் வேளையில் வெப்பமான இடத்தை நோக்கி மேலெழும்பச் செய்யும். வெட்பமான இடமாகிய அடியார்களின் உடல் என்பதால் மூலாதாரம் வழியாக அல்லது நூலிலை வழியாக கதிர்கள் உடலுக்குச் சென்று உள்ளுறுப்புகளின் நோய்களை சரி செய்து வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.  கதிர்கள் உடலுக்கு சென்றடைய ஏதுவாக குழாய் போன்ற வடிவில் இருக்கும் சேலையும் வேட்டியும் வழிவகுக்கும்.