Thursday, 14 April 2011

ஆலயமும் சுற்றுச் சூழலும்

                                                                  ஆலயமும் சுற்றுச் சூழலும்

 

சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்துவது ஆலயமே.

கோயில் இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம் என்பதன் பொருள் தூய்மை இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம் என்பதுதான் அதன் பொருள்.

ஆலயம் அமைக்கப் படுவதன் நோக்கம் சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்து வதற்க்காக திருக்கோயில் கோபுர கலசத்தின் வழியாக ஈர்க்கப் படும் அனைத்து கதிர்களையும் கருவறையின் திருவுருவத்தில் ஈர்க்கப் பட்டு ஸ்தாபனம் செய்யப் பட்டிருக்கும் எந்திரத்தில் நிலை நிறுத்தப் படும்.

பலிபீடம்

பலிபீடம் என்பது தீங்கானவற்றை அழிக்கும் அல்லது ஈர்க்கும் கருவியாகும். ஆகவே எந்திரத்தில் வெளிப்படும் கதிர்களில் தீங்கானவை அனைத்தும் நேரடியாக ஈர்க்கப்பட்டு அழிக்கப்படும். எனவேதான் பலிபீடத்தை குறுக்கலாக கடக்கக் கூடாது என்கிறார்கள் ஞானிகள். இதைப்போலவே அடியார்கள் அனைவரும் பலிபிடத்தின் முன் விழுந்து வணங்கும் பொழுது ஆன்மாவிற்கு தீங்கை விளைவிக்கும் மலங்களை பலிபீடம் ஈர்க்கும் அல்லது அழிக்கும் கருவியாக அமைந்திருக்கும்.






கருவறை எந்திரம்


அடியார்கள் வழிபடும் வேளையில் கருவறை எந்திரத்தில் வெளிப்படும் கதிர்கள் வெளியே கண்ணுக்கு புலப்படாது மையம் கொண்டிருக்கும் வேளையில் வெப்பமான இடத்தை நோக்கி மேலெழும்பச் செய்யும். வெட்பமான இடமாகிய அடியார்களின் உடல் என்பதால் மூலாதாரம் வழியாக அல்லது நூலிலை வழியாக கதிர்கள் உடலுக்குச் சென்று உள்ளுறுப்புகளின் நோய்களை சரி செய்து வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.  கதிர்கள் உடலுக்கு சென்றடைய ஏதுவாக குழாய் போன்ற வடிவில் இருக்கும் சேலையும் வேட்டியும் வழிவகுக்கும்.

No comments:

Post a Comment