மறு பயனீடு அல்லது மறு சுழற்சியில் துறையில் திருக்கோயிலின் பங்கு மிகப் பெரிய பங்கு. அப்பங்கினை சுட்டவே திருக்கோயிலில் செயல் பாட்டினை விளக்கும் தலமாக திருக்கோயில் விளங்குகின்றன.
திருக்கோயிலில் திருவிழாக் காலங்களில் இசை முழக்கத்திற்கேற்ப பலன்கள் உண்டாகும் பொருட்டு தோற் கருவி, துளைக் கருவி,கஞ்சக் கருவி,நரம்புக் கருவி என்று தமிழர் பாகுபடுத்தினர்.
தோல் கருவியான மத்தளம் மாட்டு தோலில் செய்யப் படுகிறது. மத்தள ஒலி உடலுக்கும் உள்ளத்திற்கும் அதிர் அலை வழியாக சுகம் தருகின்றது. தமிழர் வழிபாட்டில் புலால் உண்ணாமை அல்லது கொல்லாமை கொள்கையை கடைபிடித்து வருகிறது.இறந்து போகும் மாட்டை புதைப்பதற்கு முன்பதாக மறு பயனீட்டிற்கு பயன் படுத்தும் பொருட்டு அதன் தோலை இசை தரும் கருவியாக மத்தளம் அமைகின்றது.இதுபோக மாட்டின் கொழுப்பாகிய கொரசோனை திருக்கோயிலின் திருவுருவத்திற்கு நீராட்டப்படுகிறது.கொரசோனையில் திருநீராட்டு செய்தால் சுகம் உண்டாகிறது.
புணிதமான சாணத்தில் அறிவியல்:-
மாட்டு சாணத்தின் பயன்பாடு இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டு காலமாக பயன்படுத்தப் படுகிறது. இதன் பயன்பாடு மருத்துவம்,விவசாயம் அல்லது பண்ணை,சுற்றுச் சூழல் பாதுகாப்பு இன்னும் பல.
சுற்றுச் சூழலை தூய்மை படுத்தும் பொருட்டு அக்னி ஹொத்தரம் செய்யப்படுகிறது. சாணத்தை மெழுகி கோலமிடுவது, புச்சிகள் வராமல் தடுக்கும் பொருட்டு சாணத்தில் எரிப்பது,இறந்தவரை அடக்கம்செய்த பின் நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு சவத்தை எடுத்துச் சென்ற பிறகு வீதிகளில் சாணம் தெளித்து சுகாதாரம் காக்கப்படுகிறது.
மாட்டு சாணத்தால் பல அரிய பயனீடு;-
மாட்டு சாணத்தில் நேரம் காட்டி,கண்ணாடி,அழைப்பிதழ் அட்டை,எழுது கோல்,பூச்செடி பாசி,மெழுகுவர்த்தி,சாயம்,பானை,மருந்து,கொசு மருந்து சுருள்,உரம்,முகக் களிம்பு,சந்தன சவக்காரம்,பாத்திரம் கழுவும் திரவம்,பற்பொடி,எரிவாயு, மணத்திரவியம்,மின்சார உற்பத்தி இன்னும் பல மேலும் விவரிக்க கீழே கொடுக்கப் பட்டுள்ள பட்டியல்;-
அனைத்துலக மாட்டு சாண பயனீட்டு ஓவியர், சீலா கவ்டா பசுவை அகிம்சை சின்னமாக சாணத்தில் வரைந்து இருக்கிறார். மேலும் சமய சடங்கிற்கு பயன்படுத்துகிறார்.
இந்தியாவில் சாணத்தில் செய்யப்படும் செங்கல் சுகாதாரமாகவும் புழு பூச்சிகளை தடுப்பதற்கும் வீட்டை தட்பவெட்ப நிலைக்கு வைக்க துணைப் புரிகிறது.
தோக்கியோ,விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விவசாய பொறியியல் பேராசிரியர் திரு; சகே சிபுசவா அவர்கள், தாமும் தம் குழுவும் ஒவ்வொரு 100கிராம் மாட்டு சாணத்தில் 1.4 மில்லிலிட்டர் எரிபொருள் வெற்றிகரமாக தயாரித்து இருப்பதாக சொன்னார்கள்.
புருக் டனொவன்; புதிய அறிவியலாளர் இதழின் தகவல்படி நகர்புரத்தில் வாழும் மக்களை ஒப்பிடுகையில் காய்ந்த மாட்டு சாணத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 5 ந்து மடங்கு புற்று நோய் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் இத்தாலி,ஜெர்மன்,ஃபிரான்சு ஆராய்சியாளர்கள் தகவல் தந்திருக்கின்றார்கள.
பசுநீரின் மறு பயனீடு அல்லது மறு சுழற்சி;=
பசு கடவுளின் வசிப்பிடம், விருப்பத்தை சுறுசுறுப்புடன் தோற்றுவிக்கக் கூடியது. சிறு தெய்வங்கள் பசுவின் உடலில் தங்கும் இடமாகவும் வின்னுலகின் நற்கதிர்களை பெறும் இடமாக அல்லது உடலாக அமைகின்றது.வின்னுலகின் ஆளுமையும் அனுகூலங்களும் கடவுளின் ஆசிர்வாதமும் பசுவில் கிடைக்கும்.
காமதேனு (பசு) மட்டுமே தெய்வீக உயிரினமாகவும் இதன் முதுகு தண்டின் வழியாக சூரிய கேது நாடி தொடர்பு படுத்தப் பட்டுருக்கிறது (நரம்புகள் கதிரவனுக்கு தொடர்பு உடையதாக இணைக்கப் பட்டிருக்கின்றது.) ஆதலால் பசுவின் பால்,நெய்,வெண்ணெய் பொன் வண்ணத்தில் இருக்கிறது. சூரிய சக்தி இயக்கத்தினால் பொன் வண்ணத்திலான உப்பு தன்மையை இரத்தத்தில் உற்பத்தி செய்கிறது. இந்த உப்பின் பிரவேசம் அல்லது நுழைவு பசுவின் உடலிலும் பாலிலும் இடம் பெறுவதால் அதிசயத்தக்க வகையில் பல நோய்களுக்கு தீர்வுகாணப் படுகின்றது.
பசு நீரின் பயன்பாடு:-
பசுவின் நீர் புனிதமானது இது மற்ற பொருளையும் புனிதமாக்குகின்றது.வேத நூல்களும் பசுவின் நீரைப் பற்றி தெள்ளத் தெளிவாக எடுத்துரைத் திருக்கின்றன. பசு நமக்கு தாயாகவும் நாம் அவற்றிற்கு குழந்தையாக இருப்பதால் பசுவின் நீர் நமக்கு பயன்பாடாக அமைகின்றது.;-