Friday, 29 July 2011

மதமாற்றத்தால் குடும்ப உறுப்பினர் பிளவு

குடும்பத்தில் ஒருவர் மதம் மாறினால் அக்குடும்பத்தில் பல கருத்து வேறுபாடுகள் தோன்றி குடும்ப ஒற்றுமயை கட்டிக் காத்த உறவுகள் பிரிந்து  சகோதரத்துவம் வேறுபடுகின்றது. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை நீங்கீ பகைமை உண்டாகி ஒரு தாய் வயிற்றில் பிறந்தோம் என்பதை மறந்து மாற்றாந் தாய்க்கு பிறந்தவர்கள் போல் கருத்து வேறுபாடுகள் உருவாகுகின்றன. மதம் மாறிய குடும்ப உறுப்பினர் அல்லது சகோதரருக்கு திருமணம்  அல்லது நிச்சயதார்த்தம் என்று வரும் போது அங்கு மாற்று மத திருமண ஒப்பந்தம் இதன் காரணமாக சகோதரர்களுக்குள் பந்தத்தின் சடங்கு முறையில் வேறுபட்டு ஒற்றுமை இடையூராக இருக்கின்றன.......தொடரும்........

Thursday, 28 July 2011

மதமாற்றத்தால் குடும்பத்தில் பிளவு

குடும்பத்தில் கணவனோ அல்லது மனைவியோ மதம் மாறினால் குடும்ப நிலை பாதிக்கின்றது. திருமணத்தில் இணையும் போது இருவரும் ஒரே மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர்கள் பார்த்து நிச்சியிக்கப் படுவதும் அல்லது இருவரும் விரும்பி திருமணம் செய்வதும் ஒரே மதத்தினராகத்தான் இருப்பார்கள்.

இல்லற வாழ்கையில் இடைப்பட்ட காலத்தில் கணவனோ அல்லது மதம் மாறும் போது குடும்ப பிரச்சனை எழுகிறது. பிறகு வழிபாட்டில் இருவரும்  ஒன்றாக வழிபாடு செய்தது மாறி, வெவ்வேறு வழிபாடும் இதனால் குடும்பத்தில் கூட்டாக இருந்த வழிபாடு பிற  சமய வழிபாட்டு நுழைவின் காரணமாக ஒருவர்கொருவர் மதப் போராட்டமும் மனப்போராட்டமும் எற்படுகின்றது. இதனால் பிள்ளைகளின் வழிபாடும் தான் அனுசரிக்கின்ற வழிபாட்டை பின்ற்ற வற்புடுத்ததலும் இவர்களை தாம்  வழிபடும் மத தலத்திற்கு அழைத்து செல்வதும் இதன் காரணமாக கணவன் மணைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இல்லறத்தில் விரிசல் எற்படுவதும் உண்டு.

திருமண பந்தம்/ஒப்பந்தம்

கணவன் மனைவி திருமணத்தின் போது சமய அடிப்படையில் இறைவன் சாட்சியாகவும் பெரியோர்களின் சாட்சியாகவும் பந்தத்தை எற்றுக் கொள்கின்றனர். இடையில் மனசாட்சிக்கு துரோகமாக மாறுபட்ட சமயத்தையும் வழிபாட்டையும் இருவரில் ஒருவர் பின்பற்றுவதால் குடும்பத்தில் குழப்ப நிலை உண்டாகிறது. மேலும் தான் அனுசரிக்கின்ற மத வழிபாடே சரியானதென்று வாதிடும் போது அங்கு பிரிவுக்கு வழிவகுக்கிறது. கணவனோ அல்லது மனைவியோ மதம்  மாறிய பிறகு சட்ட சிக்கல்களும் உண்டாகிறது.

பிள்ளைகள் மத மாற்றம்

மதம் மாறிய கணவனோ அல்லது மனைவியோ தன் பிள்ளைகளையும் இணையரில் ஒருவருக்கு தெரியாமல் மதமாற்றம் செய்யும் போது சட்ட சிக்கல்கள் எற்படுகின்றது. பிள்ளைகளும் தாம் எந்த வழிபாட்டை பின்பற்றுவதென்று தெரியாமல் நிலை தடுமாறி குழப்பம்  நிறைந்த நிலைக்கு தள்ளப்பட்டு மனக்கவலைக்கு ஆளாகி கல்வியோ அல்லது பள்ளிப் படிப்பையோ தொடர முடியாமல் போகிறது காரணம் மதம்மாறியவர் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வதும் அவர் பாதுகாப்பில் வைத்துக் கொள்வதும் இதன் காரணமாக கணவன் மணைவிக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. மேலும் தன் பேச்சை கேட்காத  பிள்ளைகளையும் தான் அனுசரிக்கின்ற மதபோதனையை பின்பற்றாத பிள்ளைகளை கவனிக்காமல் முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு விடுவதால் பிள்ளைகளுக்கு அனாதை நிலை ஏற்படுகிறது. 


திருமண முறிவு

இணையரில் ஒருவர் மதமாற்றத்தால் மனக்காழ்பு நிலை ஏற்பட்டு இதனால் இருவரும் தீர்வு காணாத நிலையில் நீதிமன்றம் செல்லுதல். இதனை தொடர்ந்து திருமண முறிவு  ஏற்படுகின்றன. பிறகு பிள்ளைகளை யார் பராமரிப்பது / பாதுகாப்பில் இருப்பது என்று முடுவு செய்வது. சொத்து விவகார பங்கீடு, வாரிசு உரிமை,பாதுகாப்பு செல்வீனங்கள் இன்னும் பல சட்டப் பிரச்சனைகள் எதிர்நோக்க நேரிடுகின்றது. மதமாற்றத்தால் குடும்பம் பிளவு பட்டு பிரிவு நிலை ஏற்படுகின்றது  .

மதமாற்றம் இல்லறத்திற்கு புறம்பானது. .......தொடரும்....... 

மதமாற்றம் அறிவியலுக்கு புறம்பானது

பிறப்பால் ஒருவர், தாய் தந்தையர் எந்த மதத்தை சேர்ந்தவராக அல்லது சார்ந்தவராக இருக்கிறார்களோ அவர்கள் அந்த மதத்திற்கு உரியவர். தந்தையின் விந்துவின் உயிரணுவில் உயிராகி தாயின் கருவறையில் உருவமாகி பிறக்கக் கூடிய கிசு தன் உயிருக்கும் உருவுக்கும் சொந்தக்காரர்கள் அல்லது தாய் தந்தையர் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்களோ சிசுவும் அம்மதத்தை சார்ந்தவராக இருப்பது நியதி. அன்பழகனுக்கும் அறிவழகிக்கும் பிறக்கும் குழந்தை அறிவனாகத்தான் (அறிவன்) இருப்பான் ஒழிய மாறாக முகம்மதுவாகவோ (இஸ்லாம்) அல்லது மோசஸ்சாகவோ (கிருஸ்துவம்) பிறப்பதில்லை. அப்படி மதம் மாறினால் மரபணுவுக்கு புறம்பாகவும் இயற்கைக்கு புறம்பாகவும் அமையும். தான் பின்பற்றிவரும் அல்லது அனுசரிக்கின்ற மதத்தில் பிறக்கும் குழந்தை உயிரணுவில் உருவம்  பெற்று உண்டான உடல் தான் சார்ந்த மதத்திற்கே உரியதாகும்.

தாய் தந்தையர் பிறப்பால் இந்துவாக இருந்தும் தன் பிள்ளை மதம் மாறினால் தாய் தந்தையற்கு இழுக்கு. காரணம் மதம் மாறிய மகனோ அல்லது மகளோ பெயர் மாற்றம் பெற்று விடுகின்றனர். இந்துவின் விந்துவில் உருவம் பெற்று இந்துவின் தாய் வயிற்றில் ஈன்றெடுத்த பிள்ளை மதம் மாறினால் தாய்மைக்கு களங்கம்!. காரணம் ஓர் இந்துவின் விந்துவில் உருவான உடல் அமைப்பும் அதன் மரபணுவும் மாற்றம் காண்பதற்கு வாய்ப்பில்லை, மேலும் பண்பு கூறுகளும் இந்துவின் பெற்றோரின் குணாதிசயங்களை சார்ந்து இருக்கும். ஆகவே, விருப்பத்தின் பேரில் வேண்டுமானால் மதம் மாறலாம் ஆனால் அறிவியல் பூர்வமாக மாற்றம் காண்பதற்கு வாப்பிள்ளை.