குடும்பத்தில் கணவனோ அல்லது மனைவியோ மதம் மாறினால் குடும்ப நிலை பாதிக்கின்றது. திருமணத்தில் இணையும் போது இருவரும் ஒரே மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர்கள் பார்த்து நிச்சியிக்கப் படுவதும் அல்லது இருவரும் விரும்பி திருமணம் செய்வதும் ஒரே மதத்தினராகத்தான் இருப்பார்கள்.
இல்லற வாழ்கையில் இடைப்பட்ட காலத்தில் கணவனோ அல்லது மதம் மாறும் போது குடும்ப பிரச்சனை எழுகிறது. பிறகு வழிபாட்டில் இருவரும் ஒன்றாக வழிபாடு செய்தது மாறி, வெவ்வேறு வழிபாடும் இதனால் குடும்பத்தில் கூட்டாக இருந்த வழிபாடு பிற சமய வழிபாட்டு நுழைவின் காரணமாக ஒருவர்கொருவர் மதப் போராட்டமும் மனப்போராட்டமும் எற்படுகின்றது. இதனால் பிள்ளைகளின் வழிபாடும் தான் அனுசரிக்கின்ற வழிபாட்டை பின்ற்ற வற்புடுத்ததலும் இவர்களை தாம் வழிபடும் மத தலத்திற்கு அழைத்து செல்வதும் இதன் காரணமாக கணவன் மணைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இல்லறத்தில் விரிசல் எற்படுவதும் உண்டு.
திருமண பந்தம்/ஒப்பந்தம்
கணவன் மனைவி திருமணத்தின் போது சமய அடிப்படையில் இறைவன் சாட்சியாகவும் பெரியோர்களின் சாட்சியாகவும் பந்தத்தை எற்றுக் கொள்கின்றனர். இடையில் மனசாட்சிக்கு துரோகமாக மாறுபட்ட சமயத்தையும் வழிபாட்டையும் இருவரில் ஒருவர் பின்பற்றுவதால் குடும்பத்தில் குழப்ப நிலை உண்டாகிறது. மேலும் தான் அனுசரிக்கின்ற மத வழிபாடே சரியானதென்று வாதிடும் போது அங்கு பிரிவுக்கு வழிவகுக்கிறது. கணவனோ அல்லது மனைவியோ மதம் மாறிய பிறகு சட்ட சிக்கல்களும் உண்டாகிறது.
பிள்ளைகள் மத மாற்றம்
மதம் மாறிய கணவனோ அல்லது மனைவியோ தன் பிள்ளைகளையும் இணையரில் ஒருவருக்கு தெரியாமல் மதமாற்றம் செய்யும் போது சட்ட சிக்கல்கள் எற்படுகின்றது. பிள்ளைகளும் தாம் எந்த வழிபாட்டை பின்பற்றுவதென்று தெரியாமல் நிலை தடுமாறி குழப்பம் நிறைந்த நிலைக்கு தள்ளப்பட்டு மனக்கவலைக்கு ஆளாகி கல்வியோ அல்லது பள்ளிப் படிப்பையோ தொடர முடியாமல் போகிறது காரணம் மதம்மாறியவர் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வதும் அவர் பாதுகாப்பில் வைத்துக் கொள்வதும் இதன் காரணமாக கணவன் மணைவிக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. மேலும் தன் பேச்சை கேட்காத பிள்ளைகளையும் தான் அனுசரிக்கின்ற மதபோதனையை பின்பற்றாத பிள்ளைகளை கவனிக்காமல் முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு விடுவதால் பிள்ளைகளுக்கு அனாதை நிலை ஏற்படுகிறது.
திருமண முறிவு
இணையரில் ஒருவர் மதமாற்றத்தால் மனக்காழ்பு நிலை ஏற்பட்டு இதனால் இருவரும் தீர்வு காணாத நிலையில் நீதிமன்றம் செல்லுதல். இதனை தொடர்ந்து திருமண முறிவு ஏற்படுகின்றன. பிறகு பிள்ளைகளை யார் பராமரிப்பது / பாதுகாப்பில் இருப்பது என்று முடுவு செய்வது. சொத்து விவகார பங்கீடு, வாரிசு உரிமை,பாதுகாப்பு செல்வீனங்கள் இன்னும் பல சட்டப் பிரச்சனைகள் எதிர்நோக்க நேரிடுகின்றது. மதமாற்றத்தால் குடும்பம் பிளவு பட்டு பிரிவு நிலை ஏற்படுகின்றது .
மதமாற்றம் இல்லறத்திற்கு புறம்பானது. .......தொடரும்.......
No comments:
Post a Comment