Thursday, 28 July 2011

மதமாற்றம் அறிவியலுக்கு புறம்பானது

பிறப்பால் ஒருவர், தாய் தந்தையர் எந்த மதத்தை சேர்ந்தவராக அல்லது சார்ந்தவராக இருக்கிறார்களோ அவர்கள் அந்த மதத்திற்கு உரியவர். தந்தையின் விந்துவின் உயிரணுவில் உயிராகி தாயின் கருவறையில் உருவமாகி பிறக்கக் கூடிய கிசு தன் உயிருக்கும் உருவுக்கும் சொந்தக்காரர்கள் அல்லது தாய் தந்தையர் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்களோ சிசுவும் அம்மதத்தை சார்ந்தவராக இருப்பது நியதி. அன்பழகனுக்கும் அறிவழகிக்கும் பிறக்கும் குழந்தை அறிவனாகத்தான் (அறிவன்) இருப்பான் ஒழிய மாறாக முகம்மதுவாகவோ (இஸ்லாம்) அல்லது மோசஸ்சாகவோ (கிருஸ்துவம்) பிறப்பதில்லை. அப்படி மதம் மாறினால் மரபணுவுக்கு புறம்பாகவும் இயற்கைக்கு புறம்பாகவும் அமையும். தான் பின்பற்றிவரும் அல்லது அனுசரிக்கின்ற மதத்தில் பிறக்கும் குழந்தை உயிரணுவில் உருவம்  பெற்று உண்டான உடல் தான் சார்ந்த மதத்திற்கே உரியதாகும்.

தாய் தந்தையர் பிறப்பால் இந்துவாக இருந்தும் தன் பிள்ளை மதம் மாறினால் தாய் தந்தையற்கு இழுக்கு. காரணம் மதம் மாறிய மகனோ அல்லது மகளோ பெயர் மாற்றம் பெற்று விடுகின்றனர். இந்துவின் விந்துவில் உருவம் பெற்று இந்துவின் தாய் வயிற்றில் ஈன்றெடுத்த பிள்ளை மதம் மாறினால் தாய்மைக்கு களங்கம்!. காரணம் ஓர் இந்துவின் விந்துவில் உருவான உடல் அமைப்பும் அதன் மரபணுவும் மாற்றம் காண்பதற்கு வாய்ப்பில்லை, மேலும் பண்பு கூறுகளும் இந்துவின் பெற்றோரின் குணாதிசயங்களை சார்ந்து இருக்கும். ஆகவே, விருப்பத்தின் பேரில் வேண்டுமானால் மதம் மாறலாம் ஆனால் அறிவியல் பூர்வமாக மாற்றம் காண்பதற்கு வாப்பிள்ளை. 

No comments:

Post a Comment