Monday, 15 August 2011

மத மாற்றத்தால் மக்கள் தொகை பாதிப்பு

மத மாற்றத்தால் மக்கள் தொகை பாதிப்பு

மத மாற்றத்தால் இந்து மக்கள் தொகை இழப்பும் இதனால் சிறுபான்மை இனமாக கருதப்பட்டு ஒதுகீட்டில் இழப்பும் ஏற்படுகிறது. எல்லாத்துறைகளிலும் பிரதிநிதித்துவ அபாயமும் ஏற்படுகிறது. மிகக் குறைவான எண்ணிக்கையில் இனமோ அல்லது மதமோ இருந்தால் அதைச்சார்ந்த பிரதிநிதித்துவத்திற்குக் கொடுக்கும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும்.

அரசாங்கம் அல்லது தனியார் துறைகளில் பொது நிகழ்ச்சியான கலைக் கலாச்சாரம் போன்றவை ஏதேனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய திட்டமிட்டாலும் சிறுபான்மையினராக அல்லது எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருப்பின் வாய்பில்லாமல் போய்விடும்.

தேர்தல்:- நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தால் தொகுதியில் வெற்றியை அடிப்படையாக நிலைநிறுத்தும் உரிமை ஓரளவு விகிதாச்சாரப்படி அதிக பட்சமாக இருக்கும் இனமோ அல்லது மதமோ இருந்தால் முதலுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்கப் படுகிறது.

ஆலயம்:- இந்துக்கள் மதம் மாறினால் விகிதாச்சாரம் குறைந்து வழிபாட்டு தலங்கள் செயலிழந்து, பக்தர்கள் குறைந்து, சமய விழா பாதிப்படைந்து தொன்று தொட்டு கடைப்பிடித்து வரும்  சமய விழா ஊர்வலம் அரிச்சுவடு இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது. பிறகு ஆலயங்கள் வருங் காலத்தில் சுற்றுப் பயணிகள் கவரும் காட்சிக் கூடமாகவும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர் இந்து சமயத்தை வழிபட்டவர்கள் மாற்று சமயத்திற்கு சென்று விட்டதால் யாரும் வழிபட ஆளில்லை. ஆகவே, ஆலயம் நினைவகமாக ஆக்கப் பட்டது என்று கூறுங் காலம் வெகுதொலைவில் இல்லை.

தமிழ் பள்ளி:- இந்துக்கள் பெரும் பான்மையினர் மொழிப் பற்றின் குறிக்கோளோடு தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். மேலும், அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் மற்ற பொது இயக்கங்களின் பொறுப் பாளர்கள் அனைவரும் பிள்ளைகளைத் தமிழ் பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுப்பதும் பரப்புரை செய்வதுமாக இருக்கிறார்கள். இந்நிலையில் மக்கள் தொகை இழப்பு ஏற்படும் போது தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் விகிதாச்சாரம் குறைந்து காணப்படும் போது இந்நாட்டில் தமிழ்ப் பள்ளி நிலைத் தடுமாற வாய்ப்பிருக்கிறது.

No comments:

Post a Comment